செய்திகள்போலீஸ்

75வது சுதந்திர தின விழா | மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு | பார்வையாளர்கள் நுழைய தடை

75th Independence Day Celebration | 5 Layer Security for Madurai Airport | Visitors are prohibited from entering

மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் இன்று (10.08. 22) முதல் (23.08.22) தேதி வரை 12 நாட்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் வரும் பார்வையாளர்கள் பயணிகள் ஆகியோர் கடும் சோதனைக்கு பின்னரே விமான நிலைய வெளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் . மேலும் விமான நிலையத்தில் அமரும் பயணிகளின் உடமைகள் மோப்ப நாய்கள் ,வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்களை கொண்டு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.

பயணிகள் மட்டுமே இன்று முதல் விமான நிலையத்திற்குள் அனுமதி. பார்வையாளர்கள் இன்று முதல் (10.08.22) வரும் 22.08.22 வரை 13 நாட்கள் விமான நிலைய உள் வளாகத்திற்குள் அனுமதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆபத்து காலங்களில் உடனடி மீட்பு பணிக்கு அதிவிரைவு அதிரடிப்படை (QRT) தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: