4-வது இந்தியன் நேஷனல் பாரா அதெலடிக் சாம்பியன்ஷிப் போட்டி | மதுரை வீரர்கள் தங்க பதக்கம் | கலெக்டர் வாழ்த்து
4th Indian National Para Athletic Championship | Madurai players gold medal Greetings Collector

4-வது இந்தியன் நேஷனல் பாரா அதெலடிக் சாம்பியன்ஷிப் போட்டி பெங்களுரில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு பாராஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் தமிழக வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தசெல்வராஜ் ஈட்டி எறிதல்- தங்கம் பதக்கம் மற்றும் குண்டு எறிதல்-வெண்கலம் பதக்கம் பெற்றனர்.
மேலும் ரூபா அவர்கள் குண்டூ எறிதல்-தங்க பதக்கம், மனோஜ் குண்டூ எறிதல்-வெள்ளி பதக்கம்,கணேசன் ஈட்டி எறிதல்- வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெற்றி பெற்ற வீர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகரை இன்று (25-8-2022) நேரில்சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டூ மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மண்டல முதுநிலை மேலாளர் பியூலா ஜேன் சுசிலா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.இரவிச்சந்திரன், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்றுனர் ஜெ.ரஞ்சித்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.