செய்திகள்போலீஸ்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மதுரை தீயணைப்பு & மீட்பு குழுவினர் ஒத்திகை பயிற்சி

Madurai Fire & Rescue Teams rehearse ahead of Northeast Monsoon

வடகிழக்கு பருவமழை தற்பொழுது தீவிரமடைந்த நிலையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு சார்பாக முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

இந்த ஒத்திகை பயிற்சியானது மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் தெப்பத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை டவுன் தல்லாகுளம் அனுப்பானடி தீயணைப்பு நிலைய மற்றும் நிலைய அலுவலர்கள் பணியாளர்கள் ஒன்றிணைந்து ஒத்திகை நிகழ்ச்சி தத்ரூவமாக நிகழ்ந்தது.

முக்கியமாக இந்நிகழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி ? எவ்வாறு தண்ணீரில் இருந்து தப்பிப்பது ? என்கிற முறைகள் மிக தெளிவாக விளக்கப்பட்டது. அதேபோல் ரப்பர் படகு மூலம் மீட்கும் பயிற்சியும் நடைபெற்றது.

மதுரையின் மையப்பகுதியான தெப்பகுளத்தில் இந்த விழிப்புணர்வு பயிற்சியை பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கவனித்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஆபத்தான நேரங்களில் முதலில் தைரியமாக செயல்படும் முறைகள் குறித்து பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: