செய்திகள்மாநகராட்சி

ரூ.25 லட்சம் மதிப்பீடு | புதிய நலவாழ்வு மையம் பூமி பூஜை | மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமை

Rs 25 lakh estimate | New Welfare Center Bhoomi Pooja | Led by Mayor V. Indrani Ponvasant

மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் துர்கா காலனியில் புதிய நலவாழ்வு மையம் கட்டுவதற்கான பூமி பூஜை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் (26.05.2022) நடைபெற்றது.

மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றில் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம் திட்டம், பொது சுகாதார திருவிழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் சிறப்பான மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் புதிதாக 62 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ரூ.16.16 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி மண்டலம் 5க்கு உட்பட்ட பகுதிகளுக்கு 12 நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி வார்டு எண்.97 துர்கா காலனியில் தேசிய நகர்ப்பற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள நலவாழ்வு மையத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேற்கு மண்டலத் தலைவர் சுவிதா, உதவி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர் மயிலேறி நாதன், சுகாதார அலுவலர் விஜயகுமார், மாமன்ற உறுப்பினர் சிவசக்தி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: