மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
Public grievance redressal camp headed by Mayor V. Indrani Ponvasant

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) ஆனையூர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் தலைமையில் (12.07.2022) நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி ஆனையூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள கிழக்கு மண்டலம் 1 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்து வரி பெயர் மாற்றம் வேண்டி 31 மனுக்களும், குடிநீர் குழாய் வரி தொடர்பாக 7 மனுக்களும், தெருவிளக்கு வசதி வேண்டி 2 மனுக்களும், சொத்து வரி விதிப்பு தொடர்பாக 8 மனுக்களும்,
மேலும், ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக 5 மனுக்களும், காலிமனை வரி தொடர்பாக 18 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 10 மனுக்களும் என மொத்தம் 81 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயர், ஆணையாளர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது.
இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் வாசுகி, நகரப்பொறியாளர் லெட்சுமணன், உதவி ஆணையாளர் (பொ) சேகர், செயற்பொறியாளர்கள் பாக்கியலெட்சுமி, திரு.ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் (திட்டம்) அலாவுதீன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் ரெங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.