அரசியல்செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய பிஜேபி பெண் தொண்டர்

BJP woman activist throws shoe at Minister PDR Palanivel Thiagarajan's car at Madurai Airport

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியிலுள்ள ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள தும்மங்குண்டு அஞ்சல் T.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் உயிரிழந்தார் அவரது உடல் விமான மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.

அப்போது அஞ்சலி செலுத்துவதில் திமுகவினருக்கும் பிஜேபியினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காரில் ஏறி புறப்பட்ட நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் தனது செருப்பை எரிந்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிஜேபி தொண்டர்கள் பலர் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் காரை வழிமறித்து தாக்கியுள்ளனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்தினர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: