
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் போதை தடுப்பு காவல் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நெல்லூரை சேர்ந்த முத்துபாண்டி, ஆத்தூர் தாலுகா சித்தரேவை சேர்ந்த ரோஷன் ( 20), என்பதும் இருசக்கரவாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து கடத்தியதும் தெரிய வந்தது.
மேலும் இருவரையும் கைதுசெய்த போலீசார் அவர்கள் கடத்திவந்த 8 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த வாடிப்பட்டி போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1