மதுரை மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் | மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு
Madurai Corporation Development Project Works | Survey by Mayor Indrani Ponvasant

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 ஆனையூர், கூடல்புதூர், கோசாகுளம் மற்றும் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் (12.07.2022) ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலைப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், குடிநீர் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், தெருவிளக்கு உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மண்டலம் 1 வார்டு எண்.19 கூடல்புதூர் பி.எஸ்.எல்.என். மெயின் ரோடு பகுதியில் (ஊயிவையட புசயனெ குரனெ) மூலதன மான்ய நிதியின் கீழ் ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும், வார்டு எண்.5 ஆனையூர் சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள சிலையனேரி ஊரணியை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்துதல்,
மற்றும் கரையை பலப்படுத்துதல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளையும், வார்டு எண்.4ல் கோசாகுளம் பட்டிமேடு மெயின் ரோட்டில் ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை குழாய்கள் பதித்தல், கான்கீரிட் அமைத்து சாலை சரி செய்யும் பணியினையும் மாண்புமிகு மேயர், ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் வார்டு எண்.12 புதூர் வீரகாளியம்மன் கோவில் காந்திபுரம் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் நீH; தேங்கியுள்ளதை மாண்புமிகு மேயர் அவர்கள் பார்வையிட்டு அதனை விரைவில் சரிசெய்திட சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் வாசுகி, நகரப்பொறியாளர் லெட்சுமணன், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர் (பொ) சேகர், உதவி செயற்பொறியாளர் முருகேச பாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப் பொறியாளர் முத்துராமலிங்கம், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.