செய்திகள்மாநகராட்சி

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 82 மனுக்கள் பெறப்பட்டது

82 petitions were received in Madurai Corporation Public Grievance Redressal Camp

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் (02.08.2022) நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 (தெற்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்து வரி பெயர் மாற்றம் தொடர்பாக 36 மனுக்களும், பாதாளச்சாக்கடை இணைப்பு மற்றும் அடைப்பு தொடர்பாக 2 மனுக்களும், சாலை வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகள் வேண்டி 39 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 2 மனுவும், சுகாதாரம் தொடர்பாக 1 மனுவும், இதர கோரிக்கைகள் வேண்டி 2 மனுவும் என மொத்தம் 82 மனுக்கள் பொது மக்களிடமிருந்து மாண்புமிகு மேயர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது.

இம்முகாமில் மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், உதவி செயற் பொறியாளர் அலெக்ஸ்சாண்டர், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) சுப்புத்தாய், உதவிப்பொறியாளர் ஷர்புதீன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: