மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில்
Madurai Corporation Public Complaints Camp led by Mayor V. Indrani Ponvasant

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஆகியோர் தலைமையில் (14.06.2022) நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம் தொடர்பாக 15 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 1 மனுவும், புதிய குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி 1 மனுவும், ஆக்கிரமிப்பு தெடர்பாக 3 மனுக்களும், காலிமனை வரிவிதிப்பு வேண்டிய 1 மனுவும், சொத்து வரி திருத்த செய்ய வேண்டி 3 மனுவும்.
சுகாதாரம் தொடர்பாக 1 மனுவும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 28 மனுக்களும் என மொத்தம் 53 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மாண்புமிகு மேயர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.
இம்முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய வேண்டி மனு அளித்து 3 நபர்களுக்கு உடனே பெயர் மாற்றத்திற்கான அனுமதி ஆணையினை மேயர் வழங்கினார்.
இம்முகாமில் துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் அமிர்தலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கண்காணிப்பாளர்கள், உதவிப்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.