மதுரை பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் | மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தகவல்
Madurai Public petitions will be acted upon expeditiously | Information by Mayor V. Indrani Ponvasant

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் (17.05.2022) நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெயர் மாற்றம், சொத்துவரி தொடர்பாக 22 மனுக்களும், பாதாளச்சாக்கடை இணைப்பு மற்றும் அடைப்பு தொடர்பாக 20 மனுக்களும், குடிநீர் இணைப்பு மற்றும் பழுதுகள் தொடர்பாக 7 மனுக்களும், சாலை வசதி வேண்டி 2 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 1 மனுவும், சுகாதாரம் தொடர்பாக 4 மனுக்களும்.
மற்றும் கடைகள் ஒதுக்கீடு வேண்டி 6 மனுக்களும், பிற மண்டலங்கள் தொடர்பாக 8 மனுக்களும் என மொத்தம் 70 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால் நேரடியாக பெறப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் உத்தரவிட்டார்.
இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, உதவி ஆணையாளர் மனோகரன், செயற்பொறியாளர் (திட்டம்) சுப்புத்தாய், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப் செயற் பொறியாளர்கள் கனி, அய்யப்பன், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் கவிதா உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.