செய்திகள்போலீஸ்

மதுரை பனங்குளம் கண்மாய்க்குள் பதுங்கி இருந்த கும்பல் கைது | ஆயுதங்கள் பறிமுதல்

Madurai Panangulam gang was arrested Confiscation of weapons

தல்லாகுளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன். இவர் போலீசாருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் பனங்குளம் கண்மாய் அருகே சென்ற போது கும்பல் ஒன்று போலீசை கண்டதும் பதுங்கியது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார். அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள் திருப்பரங்குன்றம் வடக்கு ரத வீதி ஆறுமுகம் மகன் முத்துப்பாண்டி 20, திருப்பரங்குன்றம் சாமி பிள்ளை தெரு முருகன் மகன் தர்மா 30, திருப்பரங்குன்றம் கூடமலை தெரு பாலாஜி மகன் நாகராஜன் 21 என்று தெரியவந்தது.

அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் முதுகின் பின்புறம் வாள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தார். அவர்கள் எதற்காக அங்கே பதுங்கி இருந்தனர் என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: