செய்திகள்
மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் படப்பிடிப்பு & போட்டோ ஷூட் எடுக்க நிரந்தர தடை
Permanent ban on photography & photo shoot at Madurai Tirumala Nayakkar Mahal

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு நிரந்தரமாக அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தொல்லியில் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சின்னங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு நிரந்தரமாக தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டது.
எனவே, மதுரை திருமலை நாயக்கர் அரண்மணையில் குறும்படம்/ திரைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் போட்டோ / வீடியோ எடுக்க, பிளாஷ் லைட் மற்றும் அம்பர்லா லைட் பயண்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, முக்கியமாக நகை விளம்பரங்கள், திருமண நிகழ்வுகள், குழந்தைகள் என அனைத்து ஃபோட்டோ ஷூட்டுக்கும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1