மதுரை சர்வோதயா மெயின் ரோடு | சிறப்பு தூய்மை பணி | மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்
Madurai Sarvodaya Main Road | Special cleaning work | Mayor V. Indrani Ponvasant inaugurated the function

மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வார்டுவாரியாக வாரந்தோறும் சிறப்பு தூய்மைப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, மண்டலம் 3 வார்டு எண்.59 ரயில்வே காலனி எதிர்புரம் உள்ள சர்வோதயா மெயின் ரோடு பகுதியில் சிறப்பு தூய்மைப்பணியினை, மேயர், துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த சிறப்பு தூய்மைப்பணிகள், சர்வோதயா மெயின் ரோடு, சிங்காரபுரம், வைத்தியநாதபுரம், ஒத்தப்பட்டி, அன்சாரிநகர் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியில், சுமார் 86 தூய்மை பணியாளர்கள், 15 கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், இப்பணியில் 4 இலகுரக வாகனம், 2 கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் இயந்திரம், 2 ஜே.சி.பி.இயந்திரம், 2 மண் கூட்டும் வாகனம், 3 டிராக்டர்கள்;, 2 பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் வாகனம், 4 பேட்டரி வாகனம், 8 டிரை சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த சிறப்பு தூய்மைப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டது.
இப்பணியின் மூலம் ஒவ்வொரு வீடு வீடாக மக்கும் குப்பைகள் மற்றும் மட்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல், தெருக்களை கூட்டி சுத்தம் செய்தல், முக்கிய பிரதான சாலைகளில் தேங்கியுள்ள மணல்களை அள்ளுதல், தேவையற்ற குப்பைகளை அகற்றுதல், டெங்கு கொசு புழு உற்பத்தியாகும் இடங்களில் புகை மருந்து அடித்தல், வாய்க்கால்கள் தூர்வாருதல், மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு தூய்மைப்பணிகள் சிறப்பு தூய்மைப் பணியில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து வார்டு எண்.61 அன்சாரிநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள அங்கன்வாடி மையத்திற்கான இடத்தை, மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, நகரப்பொறியாளர் லெட்சுமணன், உதவி ஆணையாளர் மனோகரன், நகர்நல அலுவலர் ராஜா, உதவி செயற் பொறியாளர் அய்யப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர்கள் கவிதா, ரமேஷ் மாமன்ற உறுப்பினர்கள் மகாலெட்சுமி, செ.செல்வி உட்பட மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.