செய்திகள்

மதுரை கோ.புதூரில்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌ 13.05.2022 | வேலை தேடும் இளைஞர்களுக்கு அழைப்பு

Private Sector Employment Camp in Madurai‌ 13.05.2022 | Call for job-seeking youth

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌ 13.05.2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இம்முகாமில்‌ தனியார்‌ முன்னணி நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடூம்‌ இளைஞர்களைத்‌ தேர்வு செய்ய உள்ளனர்‌.

இம்முகாமில்‌ பத்தாம்‌ வகுப்பு முதல்‌ பட்டப்படிப்பு / முதுநிலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள்‌, ஐடிஐ மற்றும்‌ டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள்‌ கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்‌ துறை நிறுவனங்களில்‌ பணி நியமனம்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

வேலைநாடுநர்கள்‌ மற்றும்‌ ‘வேலையளிக்கும்‌ நிறுவனங்கள்‌ http://www.tnprivatejobs.in என்ற இணையதளத்தில்‌ தங்களது சுயவிவரங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்து பயன்படலாம்‌.

இம்முகாமில்‌ கலந்து கொள்ள விருப்பம்‌ உள்ள வேலைநாடுநர்கள்‌ தங்களது கல்விச்சான்றிதழ்கள்‌, குடும்ப அடையாள அட்டை, ஆதார்‌ அட்டை மற்றும்‌ புகைப்படத்துடன்‌ 13.05.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மதுரை கோ.புதூரில்‌ உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்திற்கு நேரில்‌ வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்‌ கொள்ளுமாறும்‌.

இம்முகாம்‌ மூலம்‌ தனியார்‌ நிறுவனங்களில்‌ வேலைவாய்ப்பு பெறுவதனால்‌ வேலைவாய்ப்பு அலுவலகப்‌ பதிவு எவ்விதத்திலும்‌ பாதிக்காது எனவும்‌ மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மைய துணை இயக்குநர் ‌(மு.கூ.பொ) ஆ.இராமநாதன்‌
தெரிவித்துள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: