செய்திகள்விபத்து

மதுரை கலைஞர் கருணாநிதி நினைவு நூலக கட்டுமான பணி | மாடியில் இருந்து விழுந்த பெண் தொழிலாளி பலி

Madurai Artist Karunanidhi Memorial Library Construction Work | A woman worker fell from the floor and died

மதுரை நத்தம் சாலையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலக கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (01.08.2022) கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இக்பால் என்ற கட்டிட தொழிலாளி, கட்டுமான பணியின் பொழுது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

உடனடியாக சக தொழிலாளர்கள் அவசரகாலம் 108க்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 மருத்துவ உதவியாளர் பரிசோதித்து, அவர் ஏற்கனவே உயிர் இழந்து விட்டார் என உறுதி செய்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தல்லாகுளம் போலீசார் அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு. பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இது குறித்து மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: