குற்றம்செய்திகள்போலீஸ்

மதுரை எழுமலை பகுதியில் 1600 கிலோ ரேசன் அரிசி கடத்தல் | இருவர் கைது

Smuggling of 1600 kg of ration rice in Eghumilai area of Madurai Two arrested

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரேசன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து டன் கணக்கில் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை உசிலம்பட்டி எழுமலை பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த மினி லாரியை காவல்துறையினர் சோதனையிட்டனர்.

அப்போது லாரியில் 40 மூடைகளில் 40 கிலோ வீதம் வைக்கபட்டிருந்த 1.6 டன் (1600 கிலோ) ரேசன் அரிசியை இருந்து ரேசன் அரிசியை கைப்பற்றினர். தொடர்ந்து மினி லாரியை ஒட்டி வந்த சோலையழகுபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரையும், ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பழனிக்குமார் என்பவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மதுரை கா.ராஜேஷ்கண்ணா

விடுபட்ட, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாற்று தேடல்கள் நெடும் பயணம் என்றபோதும், அதை தொடர்ந்து செய்து வருகின்றேன். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கம். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: