கல்விசெய்திகள்வேலை வாய்ப்பு

மதுரை ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் பட்டப்படிப்பு | HCL நிறுவனம் வழங்கும் மடிகணினி | ரூ.10,000 ஊக்கத்தொகை

Madurai Aditya Dravidian, Tribal Students Degree Opportunity with Job Opportunity | Laptop by HCL | 10,000 incentive

கடந்த 2020-2021 மற்றும் 2021-2022-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பில் 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பினை தாட்கோ மூலம் HCL நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள் முதல் ஆண்டில் HCL நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும். முதல் ஆறு மாதங்களுக்கு இணைய வழி மூலமாக பயிற்சிகள் நடத்தப்படும். பயிற்சிக்கு தேவையான மடிகணிணி HCL நிறுவனமே வழங்கும்.

அடுத்த ஆறு மாதத்தில் சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா, லக்னோ மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள HCL நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும். முதல் ஆண்டில் ஆறாம் மாதம் முதல் மாணாக்கர்களுக்கு மேற்படி நிறுவனத்தின் வாயிலாக ஊக்கத்தொகையாக ரூ.10,000/- வழங்கப்படும்.

இரண்டாம் வருடத்தில் மாணாக்கர்களுக்கு மூன்று விதமான கல்லூரிகளில் தகுதியின் அடிப்படையில் பட்டப்படிப்பு பயில வழிவகை செய்யப்படும். அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியாவிலேயே மதிப்பு மிக்க BITS-PILANI பல்கலைக் கழகத்தில் B.Sc., (Design & Computing) பாடப்பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.

இப்படிப்பானது B.Tech-க்கு சமமான படிப்பாகும். இந்த நான்கு ஆண்டு பட்டப்படிப்பினை HCL நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இக்கல்லூரியில் சேர்வதற்கு 12-ஆம் வகுப்பில் இயற்பியல் பாடத்தில் 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.

அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள AMITY பல்கலைக் கழகத்தில் மூன்று வருடம் BCA, BBA மற்றும் B.Com., பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.

மேற்காணும் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி பெறுவதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 2020-2021 மற்றும் 2021-2022-ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் வணிக கணிதம் பாடத்தில் மொத்த மதிப்பெண்களில் குறைந்த பட்சம் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இதில் தாட்கோவின் பங்களிப்பாக HCL நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கு திறன் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஒவ்வொரு மாணாக்கர்களுக்கும் பயிற்சிக்கான கட்டணத் தொகையை தாட்கோவே ஏற்கும். பின்னர் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு HCL நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1.18 இலட்சம் கட்டணத் தொகையை முதல் ஆறு மாத பயிற்சி காலத்தில் தாட்கோ கல்வி கடனாக வழங்கும்.

BITS-PILANI பல்கலைக் கழகத்தில் நான்கு வருடம் மற்றும் சாஸ்தரா (SASTRA) மற்றும் AMITY பல்கலைக் கழகத்தில் 3 வருடம் பட்டப்படிப்பில் சேர்ந்தவுடன் HCL நிறுவனத்தில் முதல் ஆண்டு திறமைக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வுடன் ஆண்டு வருமானம் ரூ.1.17 இலட்சம் முதல் ரூ.2.00 இலட்சம் வரை வழங்கப்படும்.

மேற்படி நிபந்தனைகளின்படி தேர்வு செய்யப்பட்ட மாணாக்கர்களுக்கு நுழைவு திறனுக்கான மூன்று பாடப்பிரிவிற்கு Communication Skill (Basic English), Verbal & Reasoning and Maths (Aptitude Tests) போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் இணையவழி வாயிலாக நுழைவு தேர்வு நடத்தப்படும்.

இத்தேர்வில் மூன்று பாடப்பிரிவுகளிலும் குறைந்த பட்சமாக 10 மதிப்பெண்ணிற்கு 4 மதிப்பெண் பெற்றால் போதுமானதாகும். மேலும், இத்திட்டம் தொடர்பான விபரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: