குற்றம்செய்திகள்

மதுரையில் 5,000 ரூபாய் லஞ்சமாக கேட்ட நிலஅளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்

Land surveyor nabbed by anti-bribery police for demanding Rs 5,000 bribe in Madurai

மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் சர்வே நம்பரை மாற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மதுரை தெற்கு வட்டாட்சியர் அலுவலக நில அளவையரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அடுத்து நில அளவையர் முத்துப்பாண்டி தனக்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக ரமேஷிடம் கேட்டுள்ளார். இதனை அடுத்து ரமேஷ் மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை தெற்கு தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் முத்துப்பாண்டி இடம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முத்துப்பாண்டியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: