செய்திகள்மாநகராட்சி

மதுரையில் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

Public grievance redressal camp in Madurai under the leadership of Mayor V. Indrani Ponvasant

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.5 (மேற்கு) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் தலைமையில் (05.07.2022) நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றத்தில் உள்ள மேற்கு மண்டலம் 5 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெயர் மாற்றம் வேண்டி 13 மனுக்களும், குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் பழுதுகள் தொடர்பாக 2 மனுக்களும், பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் அடைப்பு தொடர்பாக 5 மனுக்களும், தெருவிளக்கு வசதி மற்றும் சாலை வசதி வேண்டி 2 மனுக்களும், புதிய சொத்து வரி மற்றும் வரி விதிப்பு தொடர்பாக 10 மனுக்களும், காலிமனை வரி தொடர்பாக 3 மனுக்களும்.

மேலும், பிற துறைகள் தொடர்பாக 2 மனுக்களும், இதர கோரிக்கை தொடர்பாக 11 மனுக்களும் என மொத்தம் 48 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மாண்புமிகு மேயர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் உத்தரவிட்டார்.

இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, உதவி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர்கள் தியாகராஜன், பாபு, மயிலேறிநாதன். நிர்வாக அலுவலர் திரு.ஆறுமுகம், உதவி வருவாய் அலுவலர் ராஜ்குமார், சுகாதார அலுவலர் விஜயகுமார், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: