பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 83 மனுக்களை பெற்றுக் கொண்டார் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த்
Mayor V. Indrani Ponvasant received 83 petitions in the public grievance redressal camp

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் அவர்கள் தலைமையில் (26.07.2022) நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சொத்து வரி பெயர் மாற்றம் தொடர்பாக 8 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 1 மனுவும், பாதாளச்சாக்கடை இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வேண்டி 1 மனுவும், சுகாதாரம் தொடர்பாக 1 மனுவும், தெருவிளக்கு வசதி வேண்டி 5 மனுக்களும்.
மேலும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி 43 மனுக்களும், சொத்து வரி திருத்தம் தொடர்பாக 23 மனுக்களும், இதர கோரிக்கைககள் தொடர்பாக 1 மனுவும் என மொத்தம் 83 மனுக்கள் பொது மக்களிடமிருந்து மேயரால் நேரடியாக பெறப்பட்டது.
சென்ற குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 76 மனுக்களில் 68 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது மீதமுள்ள மனுக்களுக்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நகரப்பொறியாளர் லெட்சு மணன், உதவி ஆணையாளர் மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர் வீரன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.