செய்திகள்போக்குவரத்து

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

Addition of additional coaches in trains to deal with festive rush

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சில ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது. அதன்படி சென்னை எழும்பூர் – குருவாயூர் ரயிலில் (16127) செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 11 வரையும் குருவாயூர் – சென்னை எழும்பூர் ரயிலில் (16128) செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 12 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

மேலும் தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் (20691) செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 12 வரையும் நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா ரயிலில் (20692) செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 12 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி இணைக்கப்படும். டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் ரயிலில் (12689) செப்டம்பர் 9 அன்றும்/

மேலும் நாகர்கோவில் – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயிலில் (12690) செப்டம்பர் 10 அன்றும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும். கோயம்புத்தூர் – நாகர்கோவில் இரவு நேர ரயிலில் (22667) செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 10 வரையும் நாகர்கோவில் – கோயம்புத்தூர் இரவு நேர ரயிலில் (22667) செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 11 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: