செய்திகள்போலீஸ்

நண்பர்கள் தினத்தில் வாகன ஓட்டிகளுக்கு தேசியக்கொடிகளை வழங்கிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

Theppakulam Traffic Police Inspector distributed national flags to motorists on Friends Day

ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 7ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நண்பர்கள் தினத்தை போற்றும் விதமாக, மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வித்தியாசமான முறையில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

அதன்படி, மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் மதுரை கீழவாசல் மற்றும் பெரியார் நோக்கி சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி பொதுமக்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கூறியும் தேசிய கொடிகளை வழங்கியும் இனிப்புகள் வழங்கியும் நண்பர்கள் தினத்தை கொண்டாடினர்.

காவல்துறை உங்கள் நண்பன், சாலை விதிமுறைகளை மதிப்போம், தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டுங்கள் உள்ளிட்ட அறிவுரைகளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி வாகன ஓட்டிகளுக்கு கூறினார்.

தொடர்ந்து தேசியக்கொடிகளை வழங்கி நண்பர்கள் தினத்தன வாழ்க்கை வித்தியாசமான முறையில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவித்தார்.
போக்குவரத்து காவல்துறையின் இந்த செயல் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: