கல்விசெய்திகள்

நகர் ஊரகமைப்பு எல்லைக்குள் திட்டமில்லா பகுதிகளில் இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் அறிவிப்பு

Notification for application of unlicensed educational institutions operating in unplanned areas within urban rural development limits

நகர் ஊரகமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.76, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ (3))த்துறை, நாள்.14.06.2018-ல் வெளியிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலை (Online)-ல் 14.06.2018 முதல் 13.09.2018 வரை மற்றும் 22.03.2021 முதல் 04.04.2021 வரை காலத்தில் விண்ணப்பித்தவர்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகி இசைவு பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், கல்வி நிறுவனங்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில் Online-ல் www.tn.gov.in/tcp-என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க 01.07.2022 முதல் கூடுதலாக 6 மாத காலத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்துள்ள ஆவணங்களை சமர்ப்பித்து இசைவு பெற்றுக் கொள்ளுமாறு மதுரை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: