
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட துவரிமான் மேலத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா சென்ற வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து திருவிழாவின் தொடர்ச்சியாக, இன்று காலை கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்தை, முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செல்லூர் ராஜு அவர்கள் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துவரிமான் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும்அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1