திருமங்கலம் சக்தியுக சிருஷ்டி கோவிலில் கோலாட்டம், உறிஅடி திருவிழா
Kolattam, Uriadi Festival at Tirumangalam Shaktiyuga Srishti Temple

மதுரை மாவட்டம் திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள ராயபாளையம் கிராமத்தில், 108 சன்னதியில் 600 க்கு மேற்பட்ட தெய்வங்களை கொண்ட ஆன்மீக திருத்தலத்தில் சக்தியுக சிருஷ்டி கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் கோகுலாஷ்டமி தினத்தை முன்னிட்டு பெண் பக்தர்கள் அனைவரும் கிருஷ்ணர் சன்னதி முன்பு, கோலாட்டம் ஆடியும், கிருஷ்ணன் பாடலுக்கு ஏற்றவாறு கோலாட்ட நிகழ்ச்சியில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
இதனை தொடர்ந்து உறியடி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் 5 வயது குழந்தை முதல் 60 வயது முதியோர் வரை கலந்து கொண்டு உறியடியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவில் நிர்வாகி வெங்கட்ராமன் சார்பில் வாழ்த்துக்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த உறியடி திருவிழாவின் போது, உறியடி வெற்றி பெற முயற்சி செய்யும்போது, அவர்கள் மீதுமஞ்சள் நீரை ஊற்றி அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனையும் மீறி பெரும்பாலானோர் உறியடியில் வெற்றி பெற்று பக்தர்கள் அனைவரின் பாராட்டை பெற்றனர்.