செய்திகள்விபத்து

திருமங்கலம் அருகே தண்ணீர், உணவு தேடி வந்த இரு மான்களில் பெண் மான் உயிரிழப்பு ஆண் மான் படுகாயம்

Water near Thirumangalam. Among the two deer that came in search of food, the female deer died and the male deer was seriously injured

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயபாளையம் மற்றும் மேலக்கோட்டை ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் ஐந்து வயதான மான்கள் விபத்தில் சிக்கியது. இதில் பெண் மான் உயிரிழந்தது, ஆண் மகன் படுகாயம் அடைந்துள்ளது.

ராயபாளையம் கிராமத்தில் தண்ணீர் தேடி வந்த நான்கு வயது ஆண் மான் அங்குள்ள நாய்களின் பிடியில் சிக்கி, நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த மான் சோர்வுடன் மயங்கியது. இதனை அறிந்த கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதேபோன்று மேலக் கோட்டையில் உணவு தேடி வந்த ஐந்து வயதுமிக்க பெண் மான், சாலையை கடக்க முற்படும்போது வாகனம் மோதி உயிரிழந்தது. சம்பவம் குறித்து வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

மேலும் காயமடைந்த ராயபாளையம் கிராமத்தில் சிக்கிய புள்ளி மானை சிகிச்சைக்காக வனத்துறையினர் எடுத்துச் சென்றனர். இப்பகுதியில் அடிக்கடி நிகழும் மான்களின் உயிரிழப்பால் கிராம மக்கள் மான்களை காக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: