செய்திகள்விருது | விழா | கூட்டம்
திருப்பரங்குன்றம் கோவில் கண்காணிப்பாளருக்கு பிரிவு உபசார விழா
Division Courtesy Ceremony for Tiruparangunram Temple Superintendent

மதுரை திருப்பரங்குன்றம் ஆறுபடைகளில் முதற்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் பால லட்சுமி இவர் பதவி உயர்வு காரணமாக பணியிடம் மாறுதலாகி சமயபுரம் கோவிலுக்கு சென்று பணியாற்ற உள்ளார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் கோவில் அறநிலையத்துறை அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில், கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள், அலுவலகர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். மேலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பிரசாதம் பணியிடம் மாறுதலாக உள்ள பால லட்சுமிக்கு கோவில் துணை ஆணையர் சுரேஷ் வழங்கினார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1