குற்றம்செய்திகள்

டிவிஎஸ் நகர் பகுதியில் கொடூரமாக கட்டையால் தெரு நாய் அடித்துக் கொலை

A stray dog was brutally beaten to death with a stick in TVS Nagar area

மதுரை டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இரண்டு தெரு நாய்கள் சண்டை போட்டுள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி மூன்று நபர்கள் அருகில் இருந்த ஒரு கட்டையை எடுத்து ஒரு நாயின் மீது மூன்று நபர்கள் பலமாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில், சம்பவ இடத்திலேயே இந்த நாய் பலியானது. இதைக் கண்ட விலங்கு நல ஆர்வலர்கள், சாய் டிரஸ்ட் நிறுவனர் மயூர் ஹசிஜா, தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இறந்த நாயை இன்று காலை தல்லாகுளத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடக்க இருப்பதாக மயூர் ஹசிஜா தெரிவித்தார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: