உணவுகலெக்டர்செய்திகள்

சொக்கிகுளத்தில் வரும் 28ந் தேதி முதல் மாலை நேர உழவர் சந்தை துவக்கம்

The evening farmer's market will start from the 28th at Chokkikulam

வேளாண்‌ விற்பனை மற்றும்‌ வேளாண்‌ வணிகத்துறையின்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ சொக்கிகுளம்‌ உழவர்‌ சந்தையில்‌ மாலை நேரக்கடைகளை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 28.07.2022. முதல்‌ மாலை நேரக்கடைகள்‌ தினமும்‌ மாலை 4 மணி முதல்‌ 8 மணி வரை செயல்படும்‌.

மாலைநேரக்‌ கடைகளில்‌ விவசாயிகளின்‌ விளை பொருட்களான சிறுதானியங்கள்‌, பருப்பு வகைகள்‌, வெல்லம்‌, காளான்‌, முட்டை மற்றும்‌ உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்களின்‌ தயாரிப்புகளான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும்‌ மாலை நேரத்தில்‌ சொக்கிகுளம்‌ உழவர்சந்தையில்‌ நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யலாம்‌.

இதன்‌ மூலம்‌ விவசாயிகள்‌ லாபம்‌ பெறுவதுடன்‌ பொதுமக்களும்‌ குறைந்த விலையில்‌ பொருட்களை வாங்கி பயன்‌ பெறமுடியும்‌. இதற்கு
வேளாண்மை துணை இயக்குநா (வேளாண்‌ வணிகம்‌) மதுரை அவர்களை தொடர்பு கொண்டு அடையாள அட்டை பெற்றுக்‌ கொள்ள கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர்‌ மரு.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: