குற்றம்செய்திகள்போலீஸ்

செல்லூர் பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கடத்த முயன்ற பெண் | பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

A woman who tried to abduct a girl who was playing in Sellur | Caught by the public and handed over to the police station

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள வள்ளுவர் தெருவைச் சேர்ந்த ராஜகோபால் – ஸ்வர்ணலட்சுமி-க்கு 9 வயதில் 3 ஆம் வகுப்பு பயிலும் சிறுமி உள்ளது.

அதே பகுதியில் சிறுமி தனது 4 நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத பெண்மணி ஒருவர் சிறுமியின் வாயை பொத்தி கடத்த முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தோழிகள் அந்த அடையாளம் தெரியாத பெண்மணியிடம் முறையிட்டு சத்தம் போடவும் அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை பிடித்து அருகிலுள்ள செல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து போலீசாரின் விசாரணையில். சிறுமியை கடத்த முயன்ற பெண் செல்லூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பிரசிலா என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து சிறுமியை கடத்த முயன்ற பிரசிலா என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: