செய்திகள்

கூடுதல் தளர்வுகளுடன்‌ மேலும்‌ ஒரு வாரம்‌ ஊரடங்கு நீட்டிப்பு: மதுபான கடைகள் திறக்க உத்தரவு

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அறிவிப்பு

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுப்பதற்காக, இந்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில்‌ 25-3-2020 முதல்‌ தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, ஊரடங்கு சில தளர்வுகளுடன்‌ நடைமுறையில்‌ இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு 30-6-2021 வரை தொடர்ந்து அமலில்‌ இருக்கும்‌ என ஒன்றிய அரசின்‌ உள்துறை அமைச்சகம்‌ அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்‌ நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுக்கும்‌ பொருட்டு, அனைத்துக்‌ கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்‌, மருத்துவ வல்லுநர்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்களுடன்‌ தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின்‌ அடிப்படையில்‌, கொரோனா பெருந்தொற்று நோய்ப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழ்நாட்டில்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு வரும்‌ 14-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும்‌ நிலையில்‌, நோய்த்‌ தொற்றின்‌ தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும்‌, நோய்த்‌ தொற்று பரவாமல்‌ தடுத்து, மக்களின்‌ விலைமதிப்பற்ற உயிர்களைக்‌ காக்கும்‌ நோக்கத்திலும்‌, இந்த முழு ஊரடங்கு 14-6-2021 முதல்‌ 21-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும்‌ ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்‌.

இந்த ஊரடங்கின்‌ போது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ கூடக்கூடிய இடங்களில்‌ கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்‌.

கடைகளின்‌ நுழைவு வாயிலில்‌, வாடிக்கையாளர்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌ கை சுத்திகரிப்பான்கள்‌ கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல்‌ வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்‌.

கடைகளில்‌ பணிபுரிபவர்களும்‌, வாடிக்கையாளர்களும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம்‌ உறுதி செய்ய வேண்டும்‌.

அனைத்து கடைகளும்‌, குளிர்‌ சாதன வசதி இல்லாமல்‌ செயல்படுவதோடு, கடைகளில்‌, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்‌ வகையில்‌ ஒரே நேரத்தில்‌ அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின்‌ நுழைவு வாயிலில்‌ பொது மக்கள்‌ வரிசையில்‌ காத்திருக்கும்‌ போது, ஒரு நபருக்கும்‌ மற்றொருவருக்கும்‌ இடையே போதுமான இடைவெளி இருக்கும்‌ வகையில்‌ குறியீடுகள்‌ போடப்பட வேண்டும்‌.

இந்த ஊரடங்கின்‌ போது, அனைத்து மாவட்டங்களிலும்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌. நோய்த்‌ தொற்றுப்‌ பரவல்‌ கட்டுக்குள்‌ வந்திருந்தாலும்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்‌ நோய்த்‌ தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில்‌ உள்ளவர்களின்‌ எண்ணிக்கை அதிகமாக உள்ளதைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, அதே சமயம்‌ பொதுமக்களின்‌ அத்தியாவசியத்‌ தேவைகளை பூர்த்தி செய்யும்‌ நோக்கத்துடனும்‌ தற்போது ஏறகனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன்‌, மேற்காணும்‌ 11 மாவட்டங்களில்‌ கூடுதலாக கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும்‌ கட்டுப்பாடுகளுடன்‌ 14-6-2021 முதல்‌ அனுமதி அளிக்கப்படுகிறது.

  1. தனியார்‌ பாதுகாப்பு சேவை நிறுவனங்கள்‌ மற்றும்‌ அலுவலகம்‌, வீடுகள்‌ மற்றும்‌ அடுக்குமாடி குடியிருப்புகளில்‌ வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள்‌ இ-பதிவுடன்‌ அனுமதிக்கப்படும்‌.
  2. மின்‌ பணியாளர்‌, பிளம்பர்கள்‌, கணினி மற்றும்‌ இயந்திரங்கள்‌ பழுது நீக்குபவர்‌. மற்றும்‌ தச்சர்‌ போன்ற சுயதொழில்‌ செய்பவர்கள்‌ சேவை கோருபவர்‌ வீடுகளுக்குச்‌ சென்று பழுது நீக்கம்‌ செய்ய காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன்‌ அனுமதிக்கப்படுவர்‌, எனினும்‌ இவ்வகைக்‌ கடைகள்‌ திறக்க அனுமதியில்லை.
  3. மிதிவண்டி மற்றும்‌ இருசக்கர வாகனங்கள்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்ல) காலை 9.00 மணிமுதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  4. வாடகை வாகனங்கள்‌, டேக்ஸிகள்‌ மற்றும்‌ ஆட்டோக்களில்‌ பயணிகள்‌ இ-பதிவுடன்‌ செல்ல அனுமதிக்கப்படும்‌. மேலும்‌,வாடகை டேக்ஸிகளில்‌, ஓட்டுநர்‌ தவிர மூன்று பயணிகளும்‌, ஆட்டோக்களில்‌, ஓட்டுநர்‌ தவிர இரண்டு பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க அனுமதிக்கப்படும்‌.
  5. வேளாண்‌ உபகரணங்கள்‌, பம்பு செட்‌ நீக்கும்‌ கடைகள்‌ விற்பனை கடைகள்‌ அல்ல காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  6. கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  7. மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ விற்பனை காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  8. ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 25 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத்‌ தவிர, இதர 27 மாவட்டங்களில்‌ நோய்த்‌ தொற்று குறைந்து வருவதைக்‌ கருத்தில்‌ கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும்‌ அனுமதிக்கப்படும்‌.

 

  1. அழகு நிலையங்கள்‌, சலூன்கள்‌ குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, ஒரு நேரத்தில்‌ 50 சதவிகித வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ அனுமதிக்க வேண்டும்‌ என்ற நிபந்தனையுடன்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  2. அரசு பூங்காக்கள்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள பூங்காக்கள்‌, விளையாட்டு திடல்களில்‌ காலை 6.00 மணி முதல்‌ காலை 9.00 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.
  3. வேளாண்‌ உபகரணங்கள்‌, பம்பு செட்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்ல) காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  4. கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  5. மிக்சி, கிரைண்டர்‌, தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்‌ பொருட்களின்‌ பழுதுநீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  6. டாஸ்மாக்‌ கடைகள்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  7. செல்பேசி மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  8. கட்டுமானப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  9. மிக்ஸி, கிரைண்டர்‌, டி.வி. பிரிட்ஜ்‌ உள்ளிட்ட வீட்டு உபயோகப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ குடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  10. பள்ளி, கல்லூரிகள்‌ மற்றும்‌ பல்கலைக்கழகங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான நிருவாகப்‌ பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 50 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்‌. தற்போது இதர தொழிற்சாலைகளும்‌ 33 சதவிகிதம்‌பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.

  1. தொழிற்சாலைகளில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்கள்‌ நான்கு சக்கர வாகனங்களில்‌ பணிக்கு செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர்‌. தற்போது அவர்கள்‌ தங்களது இரு சக்கர வாகனங்களிலும்‌ இ-பதிவு மற்றும்‌ தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன்‌ பணிக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர்‌.
  2. தகவல்‌ தொழில்நுட்பம்‌ / தகவல்‌ தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில்‌ 20 சதவிகிதம்‌ பணியாளர்கள்‌ அல்லது 10 நபர்கள்‌ மட்டும்‌ பணிபுரிய அனுமதிக்கப்படுவர்‌.
  3. வீட்டு வசதி நிறுவனம்‌ (0-) வங்கி சாரா நிதி நிறுவனங்கள்‌ (1480) மற்றும்‌ அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள்‌ 33 சதவிகித பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  4. பொது கொரோனா நோய்த்‌ தொற்றைக்‌ கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில்‌ முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்‌, பொது மக்கள்‌ அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில்‌ வருவதையும்‌, கூட்டம்‌ கூடுவதையும்‌ தவிர்க்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌.

மேலும்‌, கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில்‌ குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில்‌ முகக்‌ கவசம்‌ அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம்‌ செய்வது ஆகியவற்றை கட்டாயம்‌ பின்பற்றவும்‌, நோய்த்தொற்று அறிகுறிகள்‌ தென்பட்டவுடன்‌, பொதுமக்கள்‌ உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

மக்கள்‌ அனைவரும்‌ அரசின்‌ முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும்‌ அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. இவ்வாறு தமிழக முதலமைச்சர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: