கலெக்டர்செய்திகள்

காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு முன்னாள் இராணுவத்தினர் விண்ணபிக்க அழைப்பு

Ex-servicemen are invited to apply for the posts of Constable, Jailer, Fireman

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இப்பணியிடத்திற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 47 வயதுக்கு மிகாமால் உள்ள முன்னாள் இராணுவத்தினர்கள், இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் பணியில் உள்ள இராணுவத்தினர் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் விடுவிக்கப்படுபவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 07.07.2022 முதல் 15.08.2022-க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.எஸ்.அனீஷ் சேகர், தெரிவிக்கிறார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: