
மதுரை காமராஜபுரத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் தெற்குதரவையை சேர்ந்தவர் வீரபாண்டி மகன் மணிகண்டன் 23. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் மதுரை காமராஜர் சாலை வடக்கு தெருவில் இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய அப்பா வீரபாண்டி இது குறித்து கீரைத்துரை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1