செய்திகள்விவசாயம்

ஓமலூர் விவசாயி 3 அடி உயரத்துக்கு கம்பு பயிரில் கதிர் வளர்த்து சாதனை

Omalur farmer achieves 3 feet height by growing radicle in rye crop

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள டேனிஷ்பேட்டை ஊராட்சி வாலியான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தனீஸ்வரன் எனும் விவசாயி. இவர் தகது தோட்டத்தில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு 110 நாளில் அறுவடைக்கு வரும் புதிய ரக கம்பான துருக்கி ரகத்தை பயிரிட்டிருந்தார்.

45 முதல் 50 நாட்களில் கம்பு கதிர் வெளிவர தொடங்கியது. இதில் கம்பு கதிர் நீளம் 3 அடி முதல் 5 அடியாகவும், தட்டு 6 முதல் 7 அடி உயரமும் இருந்தது. இந்த புதிய ரக கம்பு கதிர்களை அக்கம்பக்கம் வசிக்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

இதுகுறித்து விவசாயி தனீஸ்வரன் கூறுகையில், இந்த புதிய ரக கம்பை பயிரிட்டால் அதிக விளைச்சல் கிடைக்கும். சாதாரண கம்பு ரக கம்புகளில் 3/4 அடி உயரத்துக்கு கதிர் இருக்கும். ஆனால் இதில் சுமார் 3 முதல் 5 அடி யரம் வரை கதிர் உள்ளது. 3 மடங்கு லாபம் கிடைக்கும். தற்போது 200 கிராம் விதை கம்பில் இருந்து சுமார் 300 கிலோ கம்பு கிடைத்துள்ளது என்றார்.

விதை வேண்டுவோர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 7810988162.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: