ஏழு நாடுகள் பங்கேற்ற ஆணழகன் போட்டியில் மதுரை இளைஞர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம்
Madurai youth won the gold medal in the men's competition in which seven countries participated

மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த எம். ஜெயக்குமார் இவர் திருமங்கலம் பகுதியில் உடற்பயிற்சி பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் ஓபன் ஆசியா ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் மலேசியா, சவுதி .சவுத் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட அண்டை நாடுகள் 7 நாடுகள் ஆணழகன் வீரர்கள் பங்கேற்று போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியா சார்பில் தமிழ் மாநிலம் மதுரை மாவட்டம் திருமங்கலம்தெற்கு தெருவை சேர்ந்த எம்.ஜெயக்குமார் ஆணழகன் போட்டியில் பங்கேற்றுபோட்டியிட்ட பிற நாடுகளை ஆணழகன் போட்டியில் தோற்கடித்து இரண்டு தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் |மேலும் பதக்கங்கள், பரிசுகள் ,கேடயம் பெற்றுமுதலிடத்தை பிடித்து சாதனை புரிந்தார்.
பிறநாடுகளை தோற்கடித்துமுதலிடத்தை பிடித்து ஊர் திரும்பிய ஆணழகன் எம்.ஜெயக்குமார் அவர்களுக்கு திருமங்கலத்தில் நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், திருமங்கலம் பகுதி மக்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.