கலெக்டர்செய்திகள்

உணவு பாதுகாப்பு தொடர்பான சிறப்பான திட்டங்கள் | 75 மாவட்டங்களில் மதுரை மாவட்டம் தேர்வு | பாராட்டு சான்றிதழ் வழங்கினார் முதலமைச்சர்

Special programs related to food security | Madurai district selected out of 75 districts | The Chief Minister presented a certificate of appreciation

உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் 07.06.2022-அன்று நடந்த விழாவில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் 4-வது மாநில உணவு பாதுகாப்பு குறியீடு 2021-2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் உணவு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை சிறப்பாக செய்த 75 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் மதுரை உட்பட 11 மாவட்டங்கள் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டதற்கான பாராட்டு சான்றிதழ் சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (15.06.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் அவர்களிடம் இந்த பாராட்டு சான்றிதழை நியமன அலுவலர் மரு.V.ஜெயராமபாண்டின் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

மதுரை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு பணியில் சிறப்பாக தொடர்ந்து செயல்பட மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,வாழ்த்து தெரிவித்தார்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: